Monday, January 14, 2013


அதிரடிப்படை ஆபரேஷன் படுதோல்வி !
14 January, 2013 by admin


சோமாலியாவில் பிரான்ஸ் நாட்டு அதிரடிப் படையினர் நடத்திய பணயக் கைதி மீட்பு தாக்குதல் ஒன்று தோல்வியில் முடிந்துள்ளது. பணயக்கைதி கொல்லப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரரை காணவில்லை. அதேநேரத்தில், இந்த அதிரடி தீவிரவாத அமைப்பினர் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-ஸபாப் தீவிரவாத இயக்கத்தினரால் 2009-ம் ஆண்டு சோமாலியா தலைநகர் மொகதிஷுவிலிருந்து டெனிக்ஸ் அலெக்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் கடத்தப்பட்டிருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டு உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்றனர் தீவிரவாதிகள். இவரை விடுவிக்க பிரான்ஸ் சில முயற்சிகள் செய்தும், எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில், மாலி நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக யுத்தம் புரிய பிரஞ்சு ராணுவம் அங்கு போய் இறங்கியுள்ளது. அங்கு மோதலில் ஈடுபட ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில், பிரஞ்சு விசேட கமாண்டோ படையினர் சோமாலியாவின் தென்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

அது, இந்த அதிரடி நடவடிக்கைக்காகதான் !

அல்-ஸபாப் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு பணயக் கைதியை விடுவிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் கடுமையான பதில் தாக்குதல் வந்தது என்றும், பணயக் கைதி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் பிரஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் அல்-ஸபாப் தீவிரவாத இயக்கம் வேறு ஒரு கதை கூறுகிறது. தாம் பிடித்து வைத்திருக்கும் பிரஞ்சு உளவாளி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், அவரை என்ன செய்யப் போகிறோம் என்று இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அல்-ஸபாப் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Tuesday, January 1, 2013


வட்டிலப்பம்
image
வழங்கியவர் :
தேதி : செவ்வாய், 27/01/2009 - 01:59
ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
4
3 votes
Your rating: None
 

  • சர்க்கரை - 250 கிராம்
  • தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) - (1-2) கப்
  • முட்டை - 5
  • ஏலக்காய்த்தூள் - அரைதேக்கரண்டி
  • கஜூ - 30 கிராம்
  • பிளம்ஸ் - 30 கிராம்
  • ஜாதிக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
  • மாஜரின் - ஒரு தேக்கரண்டி

  • தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.
  • எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  • பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் கிள்ளி(அள்ளி) இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).
  • அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.
  • அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.

Note:

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லீம் மக்களினால் செய்யப்படும் முக்கியமான உணவு வட்டிலப்பம் ஆகும். இதை அவர்கள் நோன்பு காலங்களில் முக்கியமாக செய்வார்கள் . (a) எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர்கள் வைத்தியரின் ஆலோசனை கேட்டு உண்ணவும். (b)மாற்று முறை- (1)சர்க்கரைக்கு பதிலாக கித்தூள் பாவிக்கலாம்.(2)ஏலக்காய்த்தூள்க்கு பதிலாக வெனிலா பாவிக்கலாம்.(3)மாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம் (c)கவனிக்க வேண்டிய விஷயங்கள் -(1) தேங்காய் பால் (தடிப்புகூடிய முதல்பால்)(2)எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். (3)தேங்காய்ப்பாலில் சர்க்கரையை கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.

புத்தாண்டு பலன் 2013 – ஆண்டு பலன் 2013 – ராசி பலன் 2013

happy newyear

புத்தாண்டு 2013


முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மூன்றாம் கோணம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்துகொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013 முதல், 6.7.2013 வரை வக்கிரம் அடைகிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013 முதல் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். குரு ஆண்டின் தொடக்கம் முதல் 30.1.2013 வரையிலும், ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஆண்டின் இறுதி வரையிலும் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். வக்கிர சஞ்சாரத்தின்போது, கிரகங்கள் தரும் கெடு பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. மாறாக நன்மை பயக்கும். சனி, குருவைத் தவிர ராகு, கேது எனும்  சர்ப்பக் கிரகங்கள் முறையே துலா ராசியிலும் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள்.
கெடுபலன்கள் சொல்லப்பட்டிருக்கும் ராசிக்குரியவர்கள் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவரவர் ஜாதக அமைப்பின்படியுள்ள திசா-புத்திப் பலன்களைப் பொறுத்தே  பலன்கள் அமையும். மேலும், திசா-புக்தி மிகவும் பலமாக  அமைந்திருந்தால், கோச்சார பலன்களின் கெடு பலன்கள் அவ்வளவாக எதுவும் செய்யாது. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பின்பற்றி செய்து வந்தால், எந்த தீங்கும் அண்டாது.
யாருக்கு பாதிப்பு இல்லையோ அவர்களுக்கு ஒரே வரியில் – எந்த வித கவலையும் வேண்டியதில்லை என்கிற பதிலும், யாருக்கு பாதிப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு விளக்கமான பதிலும் அளிக்கப்படும். உங்கள் ஜாதக நகலுடன் தொடர்பு கொள்ளுதல் நலம்.
மின்னஞ்சல் முகவரி : shannshiv@googlemail.com                 
  Veda Sivagama Ratnam, Saivagama Pravara
  Shiva Shanmuga Sundaram M. Com. DBCA.

பிரம்ப்டன் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோவில்

Brampton Arulmigu Bhuvaneswari Amman Temple

9574 The Gore Road,
Brampton, ON L6P 0A8
Canada
Phone: 905-913-1994
வாழ்க வளமுடன்!. இந்தப் புத்தாண்டு இனிய ஆண்டாக மலரட்டும். !

மேஷ ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் மேஷம் ராசி 2013 |  mesha rasi 2013


மேஷம்:
அஸ்வினி; பரணி மற்றும் கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[ சாதகமான காலம்- குருவின் 2-மிட சஞ்சாரமான  31.1.2013  முடஹ்ல் 26. 5.134 வரை  மற்றும் குரு வக்கிர  காலமான   8.11.2013 முதல் ஆண்டின் இறுதி வரை.
சாதகமற்ற காலமான  குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை மற்றும் குருவின் 3-மிட சஞ்சாரமான 27.5.2013 முதல் 7.11.2013 வ்ரை ]
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 7-ம் இடத்திலும் கேது  உங்கள் ஜென்ம ராசியிலும்  சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை 2-ம் இடத்திலும்  மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ஆண்டுத் துவக்கம் முதல் 30.1.2013 வ்ரை  ஒரு ,மாத காலத்துக்கு குரு வக்கிர கதியில் இருப்பதால், உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள், அனாவசியத் தொந்தரவுகள் வீண் சிக்கல்கள் இப்படி ஏதாவதொரு பிரச்சினை தேடி வந்து உங்களை வாட்டும். மனக் கஷ்டமும் டென்ஷனும் உங்களை ஆட்டிப் படைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் , தாமதங்களும் வந்து எந்தக் காரியமும் உருப்படியா நடக்காது. எல்லா வேலைகளும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். வியாபாரம் மந்த நிலையை அடையும். வருமானமும் குறையும்.இந்த ஒரு மாதத்தை எச்சரிககையாகக் கடக்கவேண்டியது அவசியம்.
குருவின் சஞ்சாரம் மே மாதம் 26-ம் தேதிவரையிலும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் வர்த்தகம் வாணிபம்  செய்து வருபவர்களுடன் வர்த்தக் உறவு மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் வேற்று இன ,மத மக்கள் அந்நிய மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவியாக வும் நட்பாகவும் இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம் , நூதனமான பொருள்கள், எலக்ட்ரானிக்பொருள்கள் அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள்  மேன்மையான நிலையினை அடைவார்கள். ஏற்றுமதி –இறக்குமதி தொழில் செய்தவர்களுக்கு தற்போது  அதிர்ஷ்டமான காலமாகும். இந்த காலத்தில் இவர்கள் ஒரு கணிசமான தொகையைசம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிலருக்கு கோவில், மடாலயம் இடங்களில் கௌரவப் பட்டங்களும் பதவி, பொறுப்புகளும் கிடைக்கும். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும்.சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளுதல் போன்ற வாய்ப்பினைப் பெருவார்கள். பூர்வீகச் சொத்து மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். சிலர் இந்த சமயத்தில் தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு பணம் தேடுவார்கள். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள். அதன் காரணமாக தன்னுடைய பரம்பறை குலதர்மம் ஆகியவற்றை விட்டுவிட்டு கேவலமான நிலையில் பணமே பிரதானமாக அமையும் வாய்ப்புண்டு. அரசாங்கம் ,அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருருத்தாக உங்கள் செயல்திறனைக்கண்டு பயனைடைவார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக  லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இடருக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலர் ரிப்பேர் செலவு கொடுத்துவந்த வன்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்குவார்கள்.  சிலர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளிகள் , வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும்.மாற்றுமத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில்  மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடையவார்கள். புத்திர- புத்திரிகள்மேன்மை அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். கல்வி, வங்கி,பத்திரிக்கை, எழுத்துத்துறை,ஆசிரியர் பணியில் உள்ளோர் மேன்மை அடைவார்கள். உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் பல செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்பான பதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும்.  வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வந்து சேரும். உங்களுக்கு அதிகாரமான  பதவி அந்தஸ்து முதலியவை உண்டாகும். சிலருக்கு விதவைப் பெண்களுடன் பழக்கவழக்கங்கள் ஏற்படவாய்ப்புண்டு. ஆனால் அந்தப் பெண்ணின் மூலமாக துன்பம் உண்டாகும். . உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். சிலர் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி அதன்மூலம் நல்ல புகழை அடைவார்கள். சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். அதனால், எதிர்காலத்தில் இவர்களுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிவாய்ப்பீர்கள். வேண்டியதையெல்லாம் வாங்கித் தருவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்கள்மீது அன்பைப் பொழிவார்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம் ,தொல்லை ,வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக  உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல்  குன்றின் மேலிட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம் மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக உங்களுக்கு  மாறி உங்களை மேம்படுத்தும்.
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் சாதகமற்ற சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் துலா ராசியில் உச்சத்தில்  சஞ்சரிப்பதால் கெடு பலன்கள் அவ்வளவாக நிகழாது. ஆனால் சில சாதமற்ற பலன்களை இங்கே குறிப்பிடவேண்டியதாகிறது. அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி  நிம்மதியற்ற சூழ்நிலை நிலையை சனி உருவாக்குவார். வியாபாரத்தில் மந்த நிலை நிலவுவதால் வருமானமும் முறைய வாய்ப்புண்டு. வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்ககியால் அவதியுற நேரும். இளைஞர்கலுக்கு புத்தி நல் வழியில் செல்லது. உறவினர்களும் நண்பர்கலும் உங்களை வெறுத்து ஒதுக்குவர்.  கூட்டுத் தொசிலில் பல பிரச்சினைகள் உருவாகும். அரசாங்கத்தின் மூலம் தணடணை பெறும் சூழலும் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு புகழ் மங்கும். ஆனால் இந்த சமயத்தில் குருவின் சாதகமான சஞ்சாரம் இருக்கும்போது  பயப்படத் தேவையில்லை.
ராகுவின் 7-ம் இடத்து சஞ்சாரம் சில நன்மைகளைக் கொடுப்பதுபோல் கொடுத்து திடீரென கவிழ்த்து விடுவார். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் சில உதவிகளும் கிடைக்கும். சிலர் தங்கள் தொழிலில் மாற்றம் ஏற்ப்டுத்திக்கொள்வார்கள். சிலர் இடம் விட்டு இடம் மாறும் சூழ்நிலை உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் கெடும். கணவன்-மனைவியரிடையே கருத்து வேற்றுமை உண்டாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கொரவக் குறைவு ஏற்படும்.
கேதுபகவானின் 2-மிட சஞ்சாரம்  பொருளாதாரத்தில் பினன்டைவை ஏற்படுத்தும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் மிகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் குடிகொள்ளும். உடல் நலம்  கெடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும்.  மாணவர்களுக்கு படிப்பிலிருந்து கவனம் சிதறும். இப்படியான சாதகமற்ற பலன்கள் குருவின் சாதகமான சஞ்சாரம் நடைபெறும் காலங்களில்  எந்த தீய பலன்களையும்  ஏற்படுத்தாது.
இனி மே மாதம் 27-ம் தேதியன்று  குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கு மாறப்போகிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது.
நீங்கள் செய்யும்  செயல்கள், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை செய்வதற்காக வெளியூருக்கு சென்றுவிடுவார்கள். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சகோதரர்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்பட்டு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். கல்வி கேள்விகளில் தடை ஏற்படும். படிப்பில் கவனம் செல்லாமல் போகும். மனதில் தைரியம் இல்லாமல் எந்த வேலைக்கும் தயங்கியபடி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பீர்கள். பேச்சில் வேகம் காணப்படும். யாரிடமும் சட்டென்று கோபித்துக்கொள்வீர்கள். அதனால், பல விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள்  பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள்  வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும்  ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள்  அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.
மூன்றாமிட குருவோடு  கெண்ட சனியும்  ஜென்ம கேதுவும்  சேர்ந்துகொள்வதால், கொஞ்சம் கடுமையான பல்ன்களாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை  பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும்  பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கெண்டச்சனி சிலசமயம் பணவரவைக் கொடுப்பார். ஆனால், நீங்கள் ஏமாந்துவிடவேண்டாம். பின்னாலேயே அதிக செலவைக் கொடுத்து கடனாளியாக்குவார். கஷ்டத்தில் உங்களைச் சிக்க வைப்பதற்காகவெ கெண்டச்சனி இந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு,  கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க  நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் பாழ்கும்.  இந்த கெண்டச்சனி உச்ச சனியாக இருப்பதால் ஒரேயடியாக  உங்களைக் கவிழ்த்துவிட மாட்டார்.  நிதிநிலைமை ரொம்ப மோசமாகி விடாமல் காப்பாற்றுவார்.
ஆண்டின் இறுதிப் பகுதியான 2 மாதங்களில் அதாவது 8.11.2013 முதல், ஆண்டின் இறுதி வரை குரு வக்கிர சஞ்சாரத்தில் இருப்பதால், உங்களுக்கு மீண்டும் நற்பலன்களாக நிகழும். ஆண்டின் முற்பாதியான 26.5.13க்கு முந்தைய காலங்களில் குருவின் சாதகமான சஞ்சாரத்தில் நிகழ்ந்த நற்பலன்களே மீண்டும் நிகழும். சூப்பரான யோக பலன்கள் நிகழும்.  இதுவரை தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நடக்கும். தடைப்பட்ட  முயற்சிகள் உடனுக்குடன் நல்ல முடிவை எட்டும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிர்பார்பப்து கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை தேடிகொண்டிருந்தால் வேலை  கிடைக்கும். வேலையிலிருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். சிலர்  வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு அதன்மூலம் பயனடைவர். சிலருக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும். கோர்ட் கேஸ்களில் வெற்றி நிச்சயம். அரசியலில் உள்ளவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஆதாயம் உண்டு. கலைஞர்களுக்கு சூப்பரான காலம் இது.
இப்படியாக கிரகங்களின் பலவித சஞ்சாரங்களால், ஏற்படும் பலன்களைப் பார்த்தோம். மொத்தத்தில் ஆண்டின் பிற்பகுதி மட்டுமே கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.
பரிகாரம்:
மே மாதம் 27-ம் தேதி முதல் குரு 3-ம் இடத்துக்கு செல்வது நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி  கோவிலுக்குச்  சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலை யும் சாத்தி வழிபடவும். சனீஸ்வரனின் 7-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும்.  கறுப்புப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’ படிக்கவும். ராகுவின் சஞ்சாரத்தை சாதகமாக எடுத்துக்கோள்ள முடியாது. எனவே வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை எலுமிச்சம்பழமாலை கொண்டு வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.  கேது சஞ்சாரமும் சரியில்லாததால்,  வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும்.
பல் வளமும் சிறப்பும் பெற்று புத்தாண்டில் புது மகிழ்ச்சி காண வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம்.

ரிஷப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 | rishaba rasi 2013
 ரிஷப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 | rishaba rasi 2013
ரிஷபம்:
கிருத்திகை(2,3&4); ரோகிணி;மிருகஸ்ரீஷம ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
[சாதகமான காலம்:--ஆண்டின் துவக்கம் முடஹ்ல் 30.1.2013 வரையிலான  குருவின் வக்கிர சஞ்சார காலம். மற்றும் 27.5.2013 முதம் 7.11.2013 வரையிலான குருவின் 2-மிட சஞ்சாரம். சனி மற்றும் ராகுவின் சஞ்சாரங்களும் யோகமானவையே.
அனுகூலமற்ற காலம்:–31.1.2013. முதல் 26.5.2013 வரையிலான குருவின் ஜென்ம சஞ்சாரம். மற்றும் 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரையிலான குரு வக்கிர நிலை. கேதுவின் 12-மிட சஞ்சாரமும் சாதகமற்றது.
ஆண்டின் தொடக்கத்தில் 30.1.2013 வரை குரு வக்கிர சஞ்சாரத்தில் ருக்கிறார். அதோடு   மற்ற மாதக் கிரக சஞ்சாரங்களும்   துணையாக இருப்பதால் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும். வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம்  நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள் ,தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும். பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம்  கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.
இனி 31.1.2013 முதல் 26.5.2013 வரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்  குரு அவ்வளவு நற்பலன்களைத் தரமாட்டார்.  ஆனல்,  இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும் ஆண்டாக இருக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்,நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2013- மே மாதம் 27-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால்  வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 26–ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம குருவின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். மே மாதம் 27-ம் தேதியில் குரு சாதகமாவது மட்டுமில்லாமல் , சனி, ராகு ஆகிய கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
ஆண்டின் முற்பாதியில் குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள்.  பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சிகாண முடியும். மேற்படிப்பு நினைத்தவண்ணம் அமையாது. வேலை கிடைக்காமலும் கஷ்டப்படநேரும். நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் தடைப்படும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.  உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.  யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டு அந்தப் பணத்தை நீங்கள் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும்.  பூர்வீகச் சொத்தில் இழுபறி  தொடரும்.  தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்குட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கள் ஏற்படும். உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவநம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்துகொள்ளும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் ,சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய் கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும். எனவே கடன், கைமாற்று, இவற்றை  சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும். சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்ரும். பிள்ளைகளாலும் கவலை ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும்.
கேதுவின் 12-மிட சஞ்சாரமும் தொல்லை  தருவதாகவே அமையும். பண விரயம், பொருள் நஷடம் இவைகளைத் தவிர்க்க முடியாது. கணவன்-மனைவி உறவு சண்டை சச்சரவாகவே இருக்கும். வீண் அலைச்சல் மிகும். எந்த லாபமும் தராத பயணங்களை மேற்கொண்டு உடல் தளர்ச்சியடைவதுதான் மிச்சம். சரியான உறக்கமின்றி ரத்த அழுத்தம் அதிகமாகும். நிம்மதியற்ற சூழ்நிலையில் அல்லாட வேண்டியிருக்கும். சாது, சந்நியாசிகளின் சாபத்துக்கு ஆளாக வேண்டிவரும். சிலருக்கு பயணங்களின்போது கைப்பொருள் களவு போகும். தவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சிறை செல்லவும் கூடும்.
ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 26 வரைதான்.
மே 27-2013-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.
இது மட்டுமின்றி , ஆண்டு முழுவதும் சனிபகவானின் 6-மிடத்து சஞ்சாரமும் நல்ல பலன்களைக் கொடுக்கும். துலா ராசியில் உச்ச சனியாக சஞ்சரித்து உங்களுக்கு பலவித யோகங்களுக்கு  சனி பகவான் வழிகாட்டுவார். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் ஒரு சேர நிகழ்ந்து உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். அதுபோலவே ராகுவின் 6-மிடத்து சஞ்சாரமும் ,தான் நிற்கும் இடத்தில் சேர்ந்திருக்கும்  சனிபகவானுடன் சேர்ந்து சனி பகவான் தரும் நற்பலன்களையே வாரிவழங்கும்.
ஆண்டின் இறுதியான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரைலான குருவின் வக்கிர சஞ்சார காலத்தில் உங்களுக்கு நற்பலன் நிகழ வாய்ப்பில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கும். சிலருக்கு உடல் நலத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளும், வீண் குழப்பங்களும், வம்புகளும் என்று ஏதாவது தொல்லை  இருந்துகொண்டிருக்கும்.  26.5.2013 முன்பு  4 மாத காலங்களுக்கு   ஜென்ம ராசியில் நடந்த குருவின்  சஞ்சாரத்தின்போது இருந்தது போல் அத்தனை கஷ்டங்களும் இருக்கும். சில விஷயங்கள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். குடும்ப அமைதி காணாமல் போய் சண்டை  சச்சரவுகள் மிகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி தராது. வண்டி வாகனங்களுக்கு ரிப்பேர் செலவு வரும். வேண்டாத வழக்குகளிலும் சிக்கிக்கொள்ள நேரும்.  சனி பகவான் உச்ச நிலையில் 6-மிடத்தில் சஞ்சரிப்பதாலும் அவருக்கு குரு பார்வை கிடைப்பதும்  தொல்லைகளை பெருமளவுக்கு குறைக்கும்.
இப்படியாக ஆண்டின் முற்பகுதியில்  சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத இறுதியில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு  இனிய குரு பெயர்ச்சியினாலும், -ராகு  இவர்களின் சாதகமான சஞ்சாரத்தாலும் இனிமை தரும் நல்லாண்டாகும்.
பரிகாரம்:
உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு முறை  மிருத்யஞ்ச்சய  ஹோமமோ அல்லது ஆயுஷ் ஹோமமோ செய்யுங்கள். ஆதித்ய ஹிருத்யம்  தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகரை வழிபாடு செய்வதுடன் வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்யவும். ஆண்டின் முற்பாதிவரை குருவின் சஞ்சாரம் சரியில்லாததால வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்திக்கு மஞ்சள் மலர் மாலையும் கொண்டக்கடலை மாலையும் அணிவித்து வழிபடவும்.  உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.
வாழ்க பல்லாண்டு!சிறக்கட்டும் புத்தாண்டு!

மிதுன ராசி 2013 | மிதுனம் ராசி ஆண்டு பலன் 2013 | புத்தாண்டு பலன்


2012 மிதுன ராசி
புத்தாண்டு பலன் 2013:
மிதுன  ராசி:
மிருகசிரீஷம் (3&4); திருவாதிரை மற்றும் புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
இந்த 2013-ம் ஆண்டு தொடக்கத்தில், ஆண்டுகோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு  மே மாதம் 27-ம் தேதியன்று வரப்போகும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வ்துபோலத்தான் இருக்கும். இனி ராகு- கேது சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், ராகு உங்கள் ராசிக்கு 5-மிடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவானும் உங்கள் ராசிக்கு   5-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
12-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு ஊக்கத்தைக் குறைக்கும். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்குட்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிடும். கொலாஸ்ட்ரல்  சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .
இனி குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்திக் காட்டப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. “ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு ” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பித்தமயக்கம், தலைச் சுற்றல்  என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.
ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண் தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.
ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் ,சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.  எனவே திருமணங்கள் நிறைவேறாது.   ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.
அதுபோலவே சனி பகவானும்  ராகுவும் உங்கள் ராசிக்கு  5-மிடத்தில் சஞ்சரிப்பதும்  நல்லதல்ல. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடங்குவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரண்டையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே  சிலர் கெடுத்துக்கொள்வார்கள். சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலர் ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.  தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவற்றில் ஈடுபட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
சனியின் 5-ம் இடத்து சஞ்சாரமும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. இப்படியாக உள்ள நேரத்தில் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார்.இதனையும் சாதகமாகக் கொள்ள முடியாது என்றாலும், குருவின் பார்வைகளின் மூலம் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.  கேதுவின் சஞ்சாரத்தாலும் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் மனதில் இருந்த உளைச்சல் கொஞ்சம் நீங்கும். ஓரளவுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும்.பணப்புழக்கமும் சீராகும். உங்கள் மதிப்பு, மரியாதை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கடந்த காலத்தைவிட சிறப்பாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அவ்வப்போது மனக் கசப்பு வரத்தான் செய்யும். ஆனால், அவை உங்கள் அணுகுமுறையால் விலகிவிடும். தடைப்பட்டுவந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  சற்று முயன்றால்  கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபச் செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் படிப்படியாக அதிகரிக்கும். வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதற்குண்டான வருமானமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.  சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கைகள் மேலிடத்தால் நிறைவேற்றி வைக்கப்படும். ஆனால் இடமாற்றத்தை தவிர்க்க முடியாது. வியாபாரிகள் தொடர்ந்து சீரான வருமானத்தைக் காணலாம். லாபம் குறையாது. அதிக அலைச்சலும் அல்லலும் பட்டுத்தான் ஆக வேண்டும். ஊர் விட்டு ஊர் செல்லும்  நிலை உருவாகும். அரசின் உதவிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஆனால் முய்ற்சித்தால் கிடைக்கும். எதிரிகள் இடையூறு அவ்வப்போது தலை தூக்கினாலும் அதை எளிதில் முடிப்பீர்கள். பொருள் விரயம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் பணப் புழக்கத்துக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள் பொது நல சேவையில் சீரான நிலையில் இருப்பர். ஆனால் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காது. விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தைக் காணலாம். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படித்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும். பெண்கள் புத்தாடை ,அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்படையும்.
இப்படியாக , குருவின் பார்வைகளும் , கேதுவின் சஞ்சாரமும் சாதகமான நற்பலன்களை உங்களுக்குக் கொடுக்கும். சனி மற்றும் ராகுவினால் ஏற்படக்கூடிய தீய பலன்களையும் குறைக்க வல்லது. எனவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்ததாக  அமையும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு ராகுவின் ஐந்தாமிடத்து சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியிலலை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் ஆடை  சாத்தி கொண்டக்கடலை மாலையிட்டு வழிபடவும்.  சனியின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில்  சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்ளு தீபம் ஏற்றி வழிபடவும்.  கருப்பு நிறப் பொருள்களை வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றொருக்கும் தானம் செய்யவும்.
சனிபகவானின் யோக சஞ்சாரத்தால், இந்தப் புத்தாண்டு நலம் தரும் நல்லாண்டாக சிறக்கும். வாழ்க பல்லாண்டு. நலமளிக்கும் புத்தாண்டு!

கடக ராசி 2013 | புத்தாண்டு பலன் 2013 கடகம் ராசி | ஆண்டு பலன் 2013


2013 கடக ராசி
கடகம்:
புனர்பூசம்(4;) பூசம்; ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[ சாத்கமான காலம்: 31.1.2013 முதல் 26.5.2013 வரை. மற்றும் 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரை.
சாதகமற்ற காலம்:--27.5.2012 முதல் 7.11.2013 வரை . மற்றபடி, சனி,ராகு மற்றும் கேது முதலிய கிரக சஞ்சாரங்கள் சரியில்லை. மேலும் குருவின் சஞ்சாரம் 27.5.2013  முதல் 7.11.2013 வரை சரியில்லை.  ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை.]
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மாத இறுதியான 30.1.2013 வரை  குரு பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். அப்போது உங்களுக்கு நற்பலகளை எதிர்பார்க்க முடியாது. நினைத்தபடி நடக்காது. எதைத் தொட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும்.  சட்டென்று எதுவும் நடக்காது. வியாபாரம் மந்த நிலையில் இயங்கும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். சிலருக்கு உடல்நலத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகள் வந்து சேரும். வரவேண்டிய பணமும் சரியான நேரத்துக்கு கைக்கு வராது. வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் கிட்ட வந்து தள்ளிப்போகும். சிலர் சரியான  நேரத்துக்கு வேலைக்குப் போகமுடியாதபடி ஏதாவது தொல்லைகள், வரும். இதனால் அடிக்கடி லீவு போட்டு மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். இப்படிப் பலவிதமான கஷ்ட நஷ்டங்க இந்த குரு வக்கிர கதியில் சந்திக்க வேண்டி வரும்.
அதன்பிறகு 31.1.2013 முதல் 26.5.2013 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.  இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம்  மே மாதம் 26-ம் தேதிவரை நீடிக்கும்.
ஆண்டு தொடக்கத்தில், குருபகவான் உங்கக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பலவ வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள் வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள் ,வயிற்று சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை ஏற்படும்.  உங்கள் புகழில் பொறாமையுற்ற நெருங்கிய உறவினர் சிலர்  உங்களுக்கு எதிர்ப்பு காட்டக்கூடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள் செய்யும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்க. சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்  மே மாதம் 26–ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும்.
அதன்பிறகு மே மாதம் 27-ம் தேதி முதல்  குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல்முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும்  கிளம்பி வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய   பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி  அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு  மரியாதை குறையும் அளவுக்குப்  போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும்.
கேது உங்கள் ராசிக்கு 10மிடத்திலும் ,சனிபகவானும் ,ராகு பகவானும் உங்கள் ராசிக்கு 4-மிடத்திலும் சஞ்சரிப்பதால்  இந்த மூன்று கிரகங்களால் நற்பலன்கள் ஏற்பட வழியில்லை. சற்றேறக்குறைய மேலே குறிப்பிட்டதைப் போன்று குருவின் 12-மிட சஞ்சார பலன்களைப்போன்ற தீய பலன்களே நிகழும்.  நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும்.
குருவின் 12-மிட  சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும்  சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் க்ல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு  வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்.
ஆண்டின் இறுதியில் இரண்டு மாதங்களுக்கு அதாவது 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரை வக்கிர சஞ்சாரம் செய்யும் குரு உங்களுக்கு மிகுதியான நற்பலன்களை வாரி வழங்குவார். விட்டதை இரு மடங்காகப் பிடித்திடலாம். இதுவரை தடைப்பட்ட சுபகாரியங்கள்  அனைத்தும் இப்போது உடனுக்குடன் நடந்தேறிவிடும். வியாபாரத்தில் நிலவிய மந்தமான சூழ்நிலை மாறி வருமானம் பெருகும். உடல்நலத்தில் எவ்வித தொல்லையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாகவே இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி தொட்டது துலங்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல தகவல்களும் மகிழ்ச்சியான செய்திகளும் வந்தடையும். உங்களுடைய நீண்ட நாளைய கனவு இப்போது நிறைவேறப் போகுது. சிலர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வர். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையில் வியாபாரம் மேம்படும். சிலர் புதிய முடயற்சியில் இறங்கி வெற்றியடைவார்கள். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டவோ வீடு வாங்கவோ யோகம் உண்டாகும். பழைய கடன்கள் முழுவதுமாக அடைபடும். அரசாங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியங்கள் உடனுக்குடன் நடைபெறும். அரசாங்க சலுகைகள்  நினைத்தபடி கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கும் இது யோகமான காலம். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம் பதவி உங்களைத் தேடிவரும். நீங்க வச்சதுதான் சட்டம் என்று நிலைமை மாறிப்போகும். யாராலும் உங்களை எதுவும் செயய் முடியாது. துணிஞ்சு இறங்கி வெற்றி காண்பீர்கள்.  இப்படிப்பட்ட யோகமான பலன்களுடன் இந்த  ஆண்டு சுபமாக முடிவடையும்.
பரிகாரம்:
மே மாதம் 27-ம் தேதிக்குப் பிறகு குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். அர்த்தாஷ்டம  சனியின் சஞ்சாரத்தால் விளையக்கூடிய துயரங்களைப் போக்க சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உபகாரம் செய்யவும். கேதுவின் சஞ்சாரமும் சரியில்லையாதலால், வினாயகரை வழிபடவும்.வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும். ராகுவின் சஞ்சாரமும் சரியில்லையாதலால், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை விளக்கேற்றி  துர்கையம்மனை வழிபடவும். துன்பங்கள் ஓடிப்போகும்.

சிம்ம ராசி 2013 | சிம்ம ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் சிம்மம்

சிம்மம்:

2013 சிம்ம ராசி
மகம்; பூரம்; உத்திரம்(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.:
இந்த வருடம்  முற்பாதியில் அதாவது 2013  மே மாதம் 26-ம் தேதிவ்ரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 ம் இடத்திலும் அதன்பிறகு  மே மாதம் 27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். ஏற்கெனவே சனி பகவான் உங்கள் ராசிக்கு யோகமான 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவானும் அதே யோகமான 3-ம் இடத்திலும் கேது பகவான் சாதகமற்ற 9-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை  குருபகவான் வக்கிர கதியில் சஞ்சரித்து உங்களுக்கு யோகமான பலன்களைத் தருகிறார். எனவே முதல் ஒரு மாத காலத்துக்கு உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் வராது. உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இப்படியாக  ஆண்டின் முதல் மாதத்தில் நற்பலன்கள் நிகழும் . அதன் பின்னால்,  மே மாதம் 26-ம் தேதிவரை கொஞ்சம் படுத்தல்கள் இருக்கும்.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு  பகவான் , கொஞ்சம் சோதிக்கத்தான் செய்வார்.  உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும். குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகளால் யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்த்ல் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவீர்கள். பணத்துக்காக அல்லாடும் சூழ்நிலையை நீங்களே  உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை  எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்குத்   தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர் . உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இருக்குமானால்,அவை நீங்கி, அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும். -
10-ம் இடத்துக்கு வரும் குருபகவான் உங்கள்  பதவிக்கு சிறுசிறு தொல்லைகளைத் தருவார். புதிதாகத் தொழில் செய்யநினைப்பவர்கள்  கவனத்துடன் செயலாற்றவேண்டும கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால் கூட்டாளிகள் விலக நேரும். இருக்கும் வேலை பிடிக்காமல் வேறு வேலை  தேடுவோர் பழைய வேலையில் இருந்துகொண்டு புதியவேலையைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் கையிலிருக்கும் வேலையும் போய், வேலையின்றித் திண்டாட வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் அணுசரணை இருந்தால் மட்டுமே தொழில்விரிவாக்கத்தைப் பற்றி நினைக்கவேண்டும்.  அந்த முயற்சியைத் தள்ளிப்போடுவதே சாலச் சிறந்தது. தேவையில்லாத இடமாற்றம் வரும். கணவன்-மனைவியிடையே பிரச்சினை தோன்றும். சகோதரர்களிடையேயும் பிளவு ஏறப்டும். மனக் குழப்பங்கள் ஏற்படும்.
இனி கேது பகவான், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களைத்   தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட  தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு  என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் ,  தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  ஆனால், இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.
சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகமானது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திற்கு சனி வருவதால், இந்த சனியை குருபகவான் பார்வையிடுவதன் மூலம்  ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்துவந்த  விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்  என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் , அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடுமப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள்  இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
மே மாதம் 27-ம் தேதி முதல் நிகழப்போகும் குருவின் 11-ம் இடத்து சஞ்சாரம்  உங்களுக்கு யோகமான பலன்களைத் தரும்.  நவம்பர் மாதம் 6-ம் தேதிவரை இந்த சஞ்சாரம் தொடரும். அதுவரை பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை  தடைப்பட்ட திருணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
ஆண்டின் இறுதியில் 7.11.13 முதல்  ஆண்டு இறுதியான 31.12.13. வரை  குரு வக்கிரமாவதால், மீண்டும் சிரமங்கள் தலைதூக்கும். இத்துடன்   கேதுவின் 9-மிட  சஞ்சாரமும் சரியில்லையென்றாலும், சாதகமாக சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவின் சஞ்சாரத்தால், பாதிப்புகள் நிகழ வாய்ப்பில்லை. மே மாதம் 27-ம் தேதி முதல் 6.11.13 வரை குருவின் சஞ்சாரமும் சாதமாக இருப்பதால், இந்த ஆண்டு  மகிழ்ச்சிகரமாகவே இருக்கும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்   முற்பகுதியிலும் , கடைசி 2 மாதங்களும் , சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க!

கன்னி ராசி 2013 |கன்னி

 ராசி புத்தாண்டு பலன் 2013 |

ஆண்டு பலன் கன்னி

 கன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி
2013 கன்னி ராசி
கன்னி :
உத்திரம்(2,3&4); அஸ்தம்; சித்திரை (1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[சாதகமான காலம்:- குரு பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் 31.1.2013 முதல் 26.5.2013 வரை; மற்றும்  குருவின் வக்கிர சஞ்சார காலமான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதி வரை
சாதகமற்ற காலம்:-- குருவின் வக்கிர சஞ்சார காலமான  ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை மற்றும் குருவின் 10-மிட சஞ்சார காலமான 27.5.2013 முதல் 7.11. 2013 வரை. மற்றும் சனி, ராகு கேது சஞ்சாரங்களும் சரியில்லை.]
இந்த ஆண்டு ,குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். ஆனால், ஆண்டின் தொடக்கத்தில்  ஜனவரி 1-ம் தேதி முதல், மாதக் கடைசியான 30-ம் தேதிவரை  குருபகவானின் வக்கிர சஞ்சாரத்தினால், நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை.
இது  தவிர, மே மாதம் 27-ம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் 7-ம் தேதிவரை  குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்குப் பெயர்ந்து சாதகமற்ற நிலையிலும் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு ஆண்டின் இறுதிவரை சாதகமான நிலையிலும் சஞ்சரிக்கப் போகிறார்.
இப்போது  நீங்கள் ஏழரைச்சனியின் இறுதிப் பகுதியில் இருக்கிறீர்கள். இதனை  போகிற போக்கில் இருக்கும்  ‘ பாதசனி ‘என்பார்கள். ஆனால் இந்த சனி உங்களுக்கு மிகவும் சீரியஸான சிரமங்களைத் தராது. இந்த முறை சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான துலா ராசியில் உச்ச சனியாக சஞ்சரிப்பதால், சனியினால் ஏற்படும் தீமைகள் பெருமளவு குறையும் வாய்ப்பும் உள்ளதால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை . ஆனாலும் இந்த சஞ்சாரம் சில தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுக்கத் தவறாது.
மேலே குறிப்பிட்ட   சஞ்சாரங்களைத் தவிர ,சர்ப்பக் கிரகங்களான ராகுவும்  கேதுவும் உங்கள் ராசிக்கு 2மற்றும் 8-மிடங்களிலும்  சஞ்சரிக்கிறார்கள்.  இந்த கிரகங்களும்  நன்மைகள் தர வழியில்லை.
இனி ஒவ்வொரு சஞ்சாரங்களின் மூலம் விளையும் பலன்களைப் பார்க்கலாம்.
ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை குரு வக்கிர சஞ்சாரம் செய்வதால், உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை. கிரக சஞ்சாரங்கள் சரியில்லை. பலவகையில் படுத்தல்கள் இருக்கும். உடல் நலத்திலும் ஏதாவது பிரச்சினை வந்தவண்ணம் இருக்கும். மருத்துவச் செலவுகளும் வரும். எல்லா விஷயங்களிலும் மந்தமான போக்கே காணப்படும். குழப்பமான மனநிலை நீடிக்கும். எந்த விஷயத்தைத் தொட்டாலும் அது ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். தேவையற்ற சிக்கல்கள் ,வீண் பிரச்சினைகள் வீண் வம்புகள் வீடு தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகும். மனக் கஷ்டத்துக்கும் டென்ஷனுக்கும் ஆளாவீர்கள். இவ்விதமான கஷ்டங்கள்  ஒரு மாதம்தான் என்பதால் அனைத்து முக்கிய விஷயங்களையும் தள்ளிப் போடுங்கள்.
ஏற்கெனவே சொல்லியபடி,  ஜனவரி மாதம்   31-ம் தேதி முதல் மே மாதம்  26-ம் தேதி  வரையிலும் குருபகவான் உங்களுக்கு நன்மை தரும்  ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை செய்து மன நிறைவைப் பெறுவீர்கள்.  இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
ஆண்டின் இறுதியில், நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை  10-ம் இடத்திலிருக்கும் குருபகவான் வக்கிர கதியில் சஞ்சப்பதால்,   9-ம் இடத்தில் இருந்தபோது  அளித்த நற்பலன்களைப் போலவே,  நற்பலன்கள் நிகழும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்கள் யாவுமே நல்லவிதமாக  நிகழும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.  பண வரவு  ஏற்படும். நிதி உதவி  பல வழிகளிலிருந்தும் கிடைக்கும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  நீங்கள் ஏழரைச் சனியின் பிடியில் இருந்தாலும், சனி  துலாம் ராசியில் இருந்தபடி உச்சம் பெற்று உங்கள்  ராசிக்கு 4-ம் இடத்தையும் , 8,11-ஆகிய இடங்களையும்  பார்க்கிறார். இதன்  மூலம்  வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம்  ரிப்பேர் செலவு வரும் .  வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப்  பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி  நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும்  ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு  அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம்.   தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. பூர்வீகச் சொத்தில் இழுபறி  நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும்.
சனியின் பார்வை பலன்களைத் தவிர சனியின் 2-மிட சஞ்சாரம் குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்  நிலவும். அடக்கி வாசித்தால்  மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம்.   குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். இரண்டாமிடம் வாக்கு ஸ்தானமும் ஆவதால், பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. எனவே நியாயத்தைக்கூட எடுத்துச் சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது.  இரண்டாமிடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவான், தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனை தோன்றும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வழிபட்டு அவருடைய அருளைப் பெற முயன்றால், துன்பங்கள்  நீங்கும்.
ராகு கேதுக்களின் சஞ்சாரங்களும் நன்மை தர வழியில்லை.
ஆனால், மிகவும் ஆறுதல் தரும் விதமாக ,இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை  10-மிட குரு வக்கிரம் பெற்று உங்களுக்கு நற்பலன்களாக வாறி வழங்கும் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும்.  ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து  எலுமிச்சம்பழ விளக்கேற்றி வணங்கவும்.  கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.  கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்,வினாயகரை வழிபடவும்.   வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது.  கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம்  நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும்.  தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.
புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

துலா ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் துலாம் ராசி 2013 | thula rasi 2013

துலா ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் துலாம் ராசி 2013 | thula rasi 2013
2013 துலா ராசி
துலாம்:
சித்திரை (3&); ஸ்வாதி; விசாகம் (1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
[ சாதகமான காலம்:__குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை  மற்றும்  குருவின் 9-மிட சஞ்சார காலமான 27.5.2013 முதல் 7.11.2013 வரையும் .
அனுகூலமற்ற காலம்:_குருவின் 8-மிட சஞ்சார காலமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் குருவின் வக்கிர சஞ்சார காலமான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரையும். மேலும் சனி,ராகு,கேது முதலிய கிரக சஞ்சாரங்களும் சரியில்லை. ]
இந்த வருடம் ஆரம்பத்தில் குருபகவான்  உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது  சோதனைகளைத் தரும். இந்த சஞ்சாரம் மே மாதம் 26-ம் தேதிவரை நீடிக்கும். அதன் பிறகு  குருபகவான்  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகமே. குருவின் இந்த 9-ம் இடத்து சஞ்சாரம் பலன்களை   நற்பலன்களாக மாற்றித் தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியில் ‘ ஜென்ம சனி ‘யாக சஞ்சரிப்பது நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. அதுபோல ராகு உங்கள் ராசியிலும் , கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிப்பதும் நல்ல சஞ்சாரமல்ல.
இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
ராசியில் சஞ்சரிக்கும்   சனி பகவான் உங்களுக்கு ஏழரைச் சனியாக  வலம் வருகிறார். ஏழரைச் சனியில் இது இரண்டாவது பகுதியான  ஜென்ம சனியாகும்.  மோசமான பலன்களாக  நிகழும் என்பது விதி. ஆனால், ராசியில் சஞ்சரிக்கும் சனி உச்ச சனியாக வலம் வருவதால் பாதிப்புகளை அவ்வளவாக ஏற்படுத்தாது. எனினும் சிற்சில படுத்தல்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டியிருக்கும்.  ராசியில் சனி பகவானுடன் கூடவே ராகுவும்  சஞ்சரிக்கிறார். கேது உங்கள் ராசிக்கு  அனுகூலமற்ற நிலையில் 7-ல் சஞ்சரிக்கிறார்.  இந்த சஞ்சாரங்களால் குருபகவானின் 8-மிடத்து சஞ்சாரமும்  சேர்ந்து கொள்கிறது.
அஷ்டம குருவானவரின் சஞ்சாரம் மற்றகிரகங்களுடன் சேர்ந்து நடத்தப் போகும் அனுகூலமற்ற நிலைகளை விரிவாகப் பார்க்கலாம்.
உங்கள் மன  தைரியம் குறையும். உடல்நலம்  பாதிக்கப்படும். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டம் ஏற்படும்.  உங்கள்  செல்வ வளம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் பயனாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துக்கள்  குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத்  தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை  எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.
ராகு-கேது க்களின்  அனுகூலமற்ற சஞ்சாரமும் சேர்ந்துகொள்வதால்,  கணவன்- மனைவி உறவில் பிளவுகள்  ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளால், தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும்கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.
ஆண்டின் பிற்பாதியில் ,அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கு வந்து சுப சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இது  ஏழரைச் சனியும் , அஷ்டம குருவும் கொடுத்துவந்த  வேதனைகளை அனுபவித்து வரும் உங்களுக்கு மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும்.   9- மிடத்து- குரு உங்களுக்கு ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியர்களுடன் இருந்துவகை விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகையால்  வீட்டில் மகிழ்ச்சி போன்ற  என்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குபவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் .கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலை உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள்  திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுக்கு  எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது  நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவச்  செலவு செய்துகொண்டிருப்பவர்கல், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று   நல்லதொரு  மாற்றம் வரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை  தடைப்பட்ட திருமணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
மேற்கூறப்பட்ட  நற்பலன்கள் ஆண்டின் இறுதிப் பகுதியான நவம்பர் மாதம் 7-ம் தேதிவரை இருக்கும். அதன் பிறகு குருபகவான் வக்கிர கதியில்  சஞ்சரிக்கிறார். அப்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம்.  தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த  வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த முடியும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லாத  இடமாற்றங்கள்  வரும். கணவன்-மனைவியுடனும், மூத்தசகோதரருடனும் பிரச்சினை கள் தோன்றும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும்.  இப்படியாக சில பிரச்சினைகள் தோன்றும்.
பரிகாரம்:
உங்களுக்கு ஏழரைச் சனியின் ஜென்மச் சனி நடப்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும். கருப்புப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும்  உதவுங்கள். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும்.  உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபடுங்கள் கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். கேது சஞ்சாரம் சரியில்லை என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டு  முற்பகுதியில், சரியான ஸ்ஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த 2013ம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க!

விருச்சிக ராசி 2013 |விருச்சிகம் ராசி ஆண்டு பலன் 2013 |

புத்தாண்டு பலன்


2013 விருச்சிக ராசி
விருச்சிக  ராசி:
புத்தாண்டு பலன்கள் 2013:
விசாகம்(4),  அனுஷம், மற்றும் கேட்டை ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
[ சாதகமான காலம் : குருவின் 7-மிட சஞ்சாரமான 31.1.2013 முதல் 26.5.2012 வரையும் குருவின் வக்கிர சஞ்சாரமான 8.11 2013 முதல் ஆண்டின் இறுதிவரை. மற்றும் கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.
சாதமற்ற காலம்: குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1 2013 வரையும் குருவின் 8-மிட சஞ்சாரமான 27.5.2013 முதல் 7.11.2013 வரை. சனி பகவானும் ராகுபகவானும் சாதகமற்றநிலையில் சஞ்சரிக்கிறார்கள்.]
இந்த புது வருடம் 2013ல்   உங்களுக்கு நல்ல பலன்களாகவே நிகழப் போகிறது.  .
இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-மிடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 12, 6-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஆண்டுத் துவக்கத்தில்  30.1.2013 வரையிலும், குரு வக்கிர நிலையில் இருப்பதால் சாதகமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில் நீங்கள் எதைத் தொட்டாலும் தோல்வியில் முடியும். எந்தக் காரியமும் சட்டென்று முடியாமல் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும்.  உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து ஏமாற்றச் செய்திகளே வந்து சேரும். வியாபாரம் மந்தமாகும். வருமானமும் குறையும். காணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும். குடும்ப அமைதி கெடும். சிக்கல்களும் வீண் வம்புகளும் வீடு தேடி வரும். எனவே நீங்கள் அமைதி காப்பது மட்டுமின்றி அனைத்து  முயற்சகளையும் ஒரு மாத காலத்துகு ஒத்திப்போடலாம்.
சனி பகவானும்  ராகுவும் உங்கள் ராசிக்கு  12-ம இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. ஆனால், நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் எந்தவித கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றிவிடுவார்.  மேலும் சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும்,  சனி பகவான் உங்கள் கேந்திர ஸ்தானாதிபதியாகவும் , யோக காரகனாகவும்  இருப்பதால் கெடு பலன்கள் பெருமளவுக்கு மாறி , நற்பலன்களாகவே நிகழும். இதை மனதில் கொண்டு   சனி மற்றும் ராகு போன்ற இரு கிரகங்களின் சஞ்சார பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தியனர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள்  தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையை  விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நல்ம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். துக்க செய்தி வரும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்படலாம். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குறிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும். சிலருக்கு தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் எண்ணம் தோன்றலாம். ஆனால், சிறைத் தண்டனை அடைந்த ஒருவன் எப்படி விடுதலையாக இன்னும் ஓரிரு மாதம் இருக்கும்போது தப்பிக்க முயற்சித்து ,பிடிபட்டுவிட்டால், தண்டனையை மீண்டும் முத்லிலிருந்து முழுவதுமாக அனுபவிக்க வேண்டியிருக்கும். அதுபோல கர்ம வினைகளை அனுபவித்து தீர்ப்பதே நல்லது.
இந்த  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வரலாம்.  கோர்ட் கேஸ்களில் தீர்ப்புகள் சாதகமாக வராது.  குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும்.  பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
இனி  மே மாதம் 26-ம் தேதிவரை குருபகவானின் 7-ம் இடத்து சஞ்சாரம் மற்றும் கேது பகவானின் 6-ம் இடத்து சஞ்சாரமும் தரப்போகும் அனுகூலமான பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்.  குரு தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதும் நல்லதே. இதனால் திருமணத் தடை நீங்கும். தகுந்த வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவரும் தொய்வான நிலை மறைந்து பண ப்புழக்கம் அதிகரிக்கும். உதியோகத்தில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். புத்திரர்கள்  சம்பந்தமான நற்காரியங்கள்  சிறிது தாமதமாக நடந்தேறும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி கிரைண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள.
குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இந்த ஆண்டின்  தொடக்கத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் வருகிற மே மாதம்  26-ம் தேதிவரை நீடிக்கும். குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதல் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள்.  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும்.  அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம்.
குரு மே மாதம்  27-ம் தேதி முதல், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து பாட்டால் , அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படவேண்டியிருக்கும். . குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள்  ஏற்பட்டு, அவைகளை  குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். . கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள்.  விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர , மகிழ்ச்சியைக் கொடுக்காது. நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை  ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 31-ம் தேதிவரை ,குருவின் வக்கிர சஞ்சாரமும் நன்மை தராது.
இத்தனை சாதகமற்ற நிலையும்  நவம்பர் மாதம் 8-ம்  தேதி  முதல் மாறிவிடும். ஆண்டின் இறுதியான இந்த இரு மாதங்களும்  குருவின் வக்கிர சஞ்சாரத்தால் மிகவும் நற்பலன்களாக நிகழும்.  மீண்டும் சாதகமான பலன்களாக நிகழ ஆரம்பிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எடுத்தகாரியங்கள் சட்டுப்புட்டென்று நிறைவேறும். தொட்டது துலங்கும். வேலை  தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பூர்வீக சொத்துகள் வந்து சேரும். வியாபாரம் சிறக்கும். வருமானம் கூடும். இப்படியாக பலவித நன்மைகள் நடக்கும். ஆண்டு இறுதி மங்களகரமாகவும் மகிழ்ச்சியாகவும்  நிறைவடையும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு ,  நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும், குருவின் பார்வைகளாலும், சனியின் ஸ்தான பலத்தாலும், அதிக பாதிப்புகள் இருக்காது.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல.  தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி விரயச் சனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின் 12-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.
வாழ்க வளமுடன்!

தனுசு ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் தனுசு ராசி 2013 | Danusu rasi 2013

2013 தனுசு ராசி
தனுசு ராசி:
தனுசு ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் தனுசு ராசி 2013 | Danusu rasi 2013
மூலம், பூராடம், உத்ராடம் (1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.:
[ சாதகமான காலம் :--  குருவின் வக்கிர சஞ்சாரம் நிகழும் காலமான ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரையும்  மற்றும் குருவின் 7-ம் இடத்து சஞ்சாரமான 27.5 2013 முதல் 7.11.2013 வரையும்.  மற்றும் சனி, மற்றும் ராகுவின் சஞ்சாரம் சாத்கமாக உள்ளது.
அனுகூலமற்ற காலம்:-- குருவின் 6-மிட சஞ்சாரமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் குருவின் வக்கிர சஞ்சாரமான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரை. மற்றும் கேதுவின் சஞ்சாம் சாதகமில்லாமல் உள்ளது.]
இந்த வருடம்  தொடக்கத்தில், குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் இந்த 6-ம் இடத்து சஞ்சாரம் மே மாதம் 26-ம் தேதியோடு முடிவடைந்து, அதன்பிறகு 7- ம் இடத்துக்குப் போகிறார். சனி பகவானும் ராகு பகவானும் 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம.
ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 30-ம் தேதி வரை  6-ம் இடத்திலிருக்கும் குருபகவான் வக்கிரகதியில் சஞ்சரிப்பதால், நற்பலன்களாக நிகழும். முயற்சிகள் வெற்றியடையும். மனக் குழப்பங்கள் தீரும். இல்லறம் சிறப்படையும். தொழில் சிறக்கும். கல்வி மேம்படும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.  தொட்டது துலங்கும்.  நினைத்தவண்ணம் அனைத்தும் நிகழும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். வியாபரம் பெருகி வருமானம் உயரும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.  வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். சிலர் இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கும் யோகம் உண்டாகும். உங்களது நீண்ட நாளைய நிகழ்ச்சிகளுக்கு இந்த மாதத்தில் பலன் கிடைக்கும். இப்படியாக ஒரு அசத்தலான் ஆரம்பத்துடன் இந்த வருடம் துவங்கும்.
ஆனால், ஜனவரி 31-ம் தேதி முதல், குரு வக்கிர நிவர்த்தியடைகிறார். அதன்பிறகு,6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் அவ்வளவு நல்ல பலன்களைத் தரமாட்டார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும்  கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படலாம். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள்  குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே   உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள்  தகுதிக்கு குறைந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.
இனி கேது பகவான், உங்கள் ராசிக்கு 5-ம்  இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். கேது பகவானின் 5-மிட சஞ்சாரம் நலல்தல்ல.  மேற்சொன்ன கெடுபலன்களே நிகழும் வாய்ப்புகள்  உண்டாகும்.  தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்கலது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்கும்கூட கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கண்டங்களைத் தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.
சனிபகவானும் ராகு பகவானும்  உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகமானது.  இந்த சனி பகவானின் மேல் குருபகவான்   மே மாதம் 27-ம் தேதி முதல்   தன் சுபப் பார்வையை வீசுவதால்,  உங்களுக்கு சுபப்  பலன்களே நிகழும். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்துவகை விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  என்ற  சூழ்நிலைகள் ஏற்படும்
சனி, ராகு  கிரகங்களின்  யோகமான 11-மிடத்து சஞ்சாரத்தோடு, குருபகவானும் மே மாதம் 27-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 7-மிடத்துக்குப் போவதால், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள்  திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் தீரும்.  சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.  நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள்  அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது  நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும்.  உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை  தடைபட்ட  திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வாடர்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
இனி ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் வக்கிர கதிக்குப் போகிறார். இது உங்களுக்கு நன்மை பயக்காது. பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம்.  தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்ப்ட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை நடத்த முடியும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லா இடமாற்றங்கள் வரும். கணவன்-மனைவியிடையேயும், மூத்தசகோதரருடனும் பிரச்சினை தோன்றும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும்.  இப்படியாக சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.
இப்படியாக  சனி பகவானின் சஞ்சாரமும்,  ராகுவின்  சஞ்சாரமும்   ஆண்டின் பிற்பகுதியான மே மாதம் 27 -ம் தேதி முதல் குருவின் சஞ்சாரமும்  சாதகமாக இருப்பதால், மற்ற சரியில்லாத சஞ்சாரங்களும்கூட  உங்களுக்கு அதிக கெடுதலச் செய்ய முடியாது. ஆண்டு முழுவதும்  திருப்தியாகச் செல்லும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு கேதுவின்  சஞ்சாரம் சரியில்லை என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான ஸ்ஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க!

மகர ராசி 2013 | மகர ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் மகரம்

2013 மகர ராசி
புத்தாண்டு பலன்கள்:
மகர ராசி:
உத்திராடம் (2,3&4), திருவோணம், அவிட்டம் (1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[சாதகமான காலம்:-- குருவின் 5-மிட சஞ்சார காலமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் குருவின் வக்கிரமான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரையும்.
அனுகூலமற்ற காலம்:– குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1.2013 வரையும்  மற்றும்  குருவின் 6-மிட சஞ்சாரமான 27.5.2013 முதல் 7.11.2013 வரையும். ஏனைய கிரகங்களான சனி,ராகு, கேது சஞ்சாரங்களும் சரியில்லை.
குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 10 மற்றும் 4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள்.  சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
சனி மற்றும் ராகு , கேதுக்களின் சஞ்சாரம் உங்களுக்கு  உகந்தது அல்ல. ஆனால், நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் எந்தவித கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றிவிடுவார். இதை மனதில் கொண்டு  கிரகங்களின்  சஞ்சார பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 30-ம் தேதி வரை குருபகவான் வக்கிர கதியில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்தபடி அவர்  செய்யும் வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு எந்த நற்பலனையும்  தராது.  மேலும் சனிபகவானின் 10- மிடத்து சஞ்சாரமும் ராகு கேதுக்களின் சஞ்சாரமும்  உங்களுக்கு நற்பலன்கள் தராது. பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குரிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தினைப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும். சிலருக்கு தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் எண்ணம் தோன்றலாம். ஆனால், சிறைத் தண்டனை அடைந்த ஒருவன் எப்படி விடுதலையாக இன்னும் ஓரிரு மாதம் இருக்கும்போது தப்பிக்க முயர்சித்து பிடிபட்டுவிட்டால், தண்டனையை மீண்டும் முத்லிலிலிருந்து முழுவதுமாக அனுபவிக்க வேண்டியிருக்கும். அதுபோல கர்ம வினைகளை அனுபவித்து தீர்ப்பதே நல்லது.
இந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
இனி சனியின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.   உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியினால் உங்களுக்கு பெரிய பாதிப்புகள் வராது. ஏனென்றால், ராசியாதிபதி சுக்கிரனுக்கு சனி நண்பராதலால், உங்கள்  ராசியில் உச்ச சனியாக வல்ம் வருவதால், பயப்படத் தேவையில்லை. மேலும்  26. 5.2013 வரை குரு தனது  ஒன்பதாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதும் நல்லதே. இதனால் திருமணத் தடை நீங்கும். தகுந்த வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவரும் தொய்வான நிலை மறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும். உதியோகத்தில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். புத்திரர்கள் சம்பந்தமான நற்காரியங்கள் சிறிது தாமதமாக நடந்தேறும். உறவினர்களிடையே பகை  வளரும். சம்பந்திகளிடையே தேவையற்ற மனத்தாங்கல் வரும். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விஷயங்களில் மனக்கஷ்டம் உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி வகையில் அடிக்கடி பிரிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரக நிலைகளை அனுசரித்து நடந்துகொண்டால், விதியை மதியால் வெல்லலாம். நிலம், வீடு வாங்கும் விஷயங்களை தள்ளிப்போடுவது ந்ல்லது. கடன், நோய் ஏர்படும். உங்களுக்கு சொந்தமான மூதாதையர் நிலங்கள் உறவினர்களிடம் பறிபோக உள்ளது. ஆரோக்கியக் குறை ஏற்படலாம். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கும் சனியை  குரு பார்ப்பதால், பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள். கடன் வாங்கி கடன்காரனாகவும் ஆவீர்கள்.. நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள்.
இனி குருவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இந்த  ஆண்டின்  தொடக்கத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் வருகிற மேமாதம் 26-ம் தேதிவரை நீடிக்கும். அதன்பிறகு 27-ம் தேதிமுதல் ஆண்டு இறுதிவரை குரு உங்கள் ராசிக்கு  6-ம் இடத்துக்கு மாறுகிறார். ஆண்டு தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு  5-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகளிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள்  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.  நான்காம் இடத்து கேது பயணங்களில் தொல்லை கொடுப்பார். உணவில் ஒவ்வாமை ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள்  உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம்.
இனி குரு மே மாதம்  27-ம் தேதி முதல், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வீர்கள்.  கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன்  கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு  தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தைஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  குருவின் 6-ம் இட சஞ்சாரத்துக்காக நீங்கள் அதிகம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், சனி உங்களுக்கு யோக காரகன் என்பதால், உங்களுக்கு  பெரிய தொல்லைகளை ஏற்படுத்தமாட்டார்.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை  கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி  சாதகமின்றி  வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  10-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவின்  4-ம் இட  சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். கோவிலை சுத்தம் செய்து வணங்கவும் . கொள்ளு தானம் செய்யவும்.
இந்தப் புத்தாண்டு  முற்பாதியில் அமைந்த சாதகமான குரு சஞ்சாரம் உங்களைக் காப்பாற்றும்.
வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.

கும்ப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் கும்பம் ராசி 2013 | kumba rasi 2013

2013 கும்ப ராசி kumba rasi
கும்பம்:
அவிட்டம் (3&4),சதயம், பூரட்டாதி(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
{ சாதகமான காலம்:  ஆண்டின் துவக்கம் முதல்  ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை குரு வக்கிர சஞ்சாரம் சாதகமாகிறது.  மே மாதம் 27-ம் தேதி முதல், நவம்பர் மாதம் 7-ம் தேதி வரை குருவின் 5-மிட சஞ்சாரம் சாதகமாகிறது.  தவிர, கேதுவின் 3-மிட சஞ்சாரம் ஆண்டு முழுவதும் சாதகமானது.
சாதகமற்ற நிலை: ஜனவரி 31-ம் தேதி முதல் மே மாதம் 26-ம் தேதிவரை குருவின் 4-மிட சஞ்சாரம் சரியில்லை. சனி மற்றும் ராகுவின் சஞ்சாரமும் , நவம்பர் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை நிகழும் குருவின் வக்கிர சஞ்சாரமும் சரியில்லை. }
இந்த வருடம் உங்களுக்கு நன்றாக இருக்கும். அஷ்டமச் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.  இந்த வருடம் குருபகவான்  மே மாதம் 26-ம் தேதி வரையும் , 27-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும்  சஞ்சரிக்கப் போகிறார்.  ஏனைய கிரகங்களான  சனி பகவானும், ராகு பகவானும்  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும்  கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
ஆண்டின் ஆரம்பத்தில்  ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை  வக்கிர கதியிலிருக்கும் குரு பகவான்  உங்களுக்கு நற்பலன்களை வாரி  வழங்குவார்.  உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.  வியாபாரம் சிறக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். கூட்டுத் தொழில் மேம்படும் . வெளிநாட்டு வாணிபம் சிறக்கும்.  அலுவலகத்தில் நல்ல சூழல் உருவாகும். மேலதிகாரிகள் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவர். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் , சம்பள உயர்வும் கிடைக்கும்.  பொறுப்பான பதவிக்கு மாற்றப்படுவீர்கள். திருமணத் தடை விலகி வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். கோர்ட் வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்து வெற்றியடையும். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கம் ஒரு முடிவுக்கு வந்து உங்கள் கைக்கு வந்து சேரும்.  பிள்ளைகளின் கல்வி ஏற்றம் பெறும். அவர்களின் வேலை வாய்ப்பு பிரகாசமாகும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு உதவுவார்கள். இப்படியாக பல நற்பலன்களை  வக்கிர குரு வாரி வழங்குவார்.
இனி,  மே மாதம் 31-ம் தேதி முதல்  உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும்  குரு பகவான் உங்களுக்கு சில தொல்லைகள் தருவார். உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். . தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்கலுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல்திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே  உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள்  தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.
சனி பகவானும் ராகு பகவானும்  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்பப்  பணப்பழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களைத் தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.
ஆண்டின் பிற்பாதியில் மே மாதம் 27-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 7-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
சாதகமான கேதுவின் சஞ்சாரமும் துணை நிற்பதால், பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று சங்கடங்கள்  தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைப்பட்ட திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
ஆண்டின் இறுதியில் 2 மாதங்களுக்கு குரு வக்கிர கதியில் இயங்குகிறார். இந்த வக்கிர சஞ்சாரம்  மே மாதம் 8-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. ஆண்டின் இறுதிவரை நீடிக்கும் இந்த வக்கிர சஞ்சாரத்தின் விளைவாக, பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம்.  தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த முடியும்.  பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லா இடமாற்றங்கள்  வரும். கணவன்-மனைவியிடையேயும், மூத்தசகோதரருடனும் பிரச்சினை தோன்றும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும்.  இப்படியாக சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.
இப்படியாக  சனி ,ராகு முதலிய கிரகசஞ்சாரங்களும் முற்பாதியில் குருவின் சஞ்சாரமும்  சரியில்லை என்றாலும், ஆண்டு  முழுவதும் சாதகமாக சஞ்சாரம் செய்யும் கேதுவும் ஆண்டின் பிற்பாதியில் குருவின் சாதகமான சஞ்சாரமும்  ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிம்மதி தருவார்கள். அஷ்டமச் சனியின் பிடியிலிருந்தும் விலகிவிட்டதால் பயமில்லை.
இது இனிய புத்தாண்டுதான்!.
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும்.  வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபடுங்கள் கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான  சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!. வாழ்க

மீன ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் மீனம் ராசி 2013 | Meena rasi 2013


மீன ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் மீனம் ராசி 2013 | Meena rasi 2013
2013 மீன ராசி
புத்தாண்டு பலன்கள்:
    மீனம்:
 பூரட்டாதி(4),உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
              [சாதகமான காலம்:-- குருவின் வக்கிர சஞ்சார காலமான ஆண்டின் துவக்கம் முதல் அதாவது 1.1.2013 முதல் 30.1.2013 வரையும் குருவின் 4-மிட சஞ்சாரமான 27. 5.2013 வரையும் .
           சாதகமற்ற காலம்:--குருவின் 3-மிட சஞ்சார காலமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் ஆண்டின் இறுதியான 8.11.2013  முதல் ஆண்டின் இறுதிவரையும்.  மற்றும் சனி,ராகு மற்றும் கேது சஞ்சாரங்கள் சாதகமில்லை. ]
                           இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள்  ராசிக்கு 8, 2 -ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
                 ஆண்டின் துவக்கமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தபடி வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  கிரக நிலவரங்கள் சாதகமான இடங்களில் காணப்பட்டு வருவதால், வருஷ ஆரம்பமே மிக மிக சிறப்பாகவும் யோகமாகவும் காணப்பட்டு வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் ,மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் தாமதங்கள் அனைத்தும் விலகிவிடும். சுப நிகழ்ச்சிகள் நடக்கறதுக்கும் வாய்ப்பு உள்ளது. தொட்டது துலங்கும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டுமே  நீங்கிவிடும். உங்களது உடல்நலத்தில் இருந்துவந்த தொந்தரவுகள் நிவர்த்தியாகி நல்ல ஆரோக்கியம் காணப்படும். உங்களது நீண்ட நாளைய முயற்சிகளுக்குக்க்கூட இப்போது பலன் கிடைக்கும். ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றியடைய முடியும். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் இப்போது புதிய தொழில் ,வியாபாரம் தொடங்கலாம். வரவேண்டிய பணம் உடனடியாக கைக்கு வரும்.
                                   இனி வக்கிர நிவர்த்தியாகும்  குரு 31.1.2013 முதல் 26.5. 2013 வரை  உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனை  சாதகமற்ற சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. குடும்பத்திற்காக  நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக  தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நலம் குறையும் . முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள்  தங்கள்  கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின்  கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன்  வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
                சனி, ராகு மற்றும் கேதுவின்  சஞ்சாரங்களும் சாதகமாக இல்லை . இனி  பலன்களைப் பார்க்கலாம்.  பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக் கொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன்  காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குரிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும்.
                     இந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம் உண்டாகும். . கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு  நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள்  ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
                               புத்திரர்கள் சம்பந்தமான நற்காரியங்கள் சிறிது தாமதமாக நடந்தேறும். அஷ்டம சனி உறவினர்களிடையே பகையை வளர்க்கும். சம்பந்திகளிடையே தேவையற்ற மனத்தாங்கல்கள் வரும். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விஷயங்களில் மனக்கஷ்டம் உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி வகையில் அடிக்கடி பிரிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரக நிலைகளை அனுசரித்து நடந்துகொண்டால், விதியை மதியால் வெல்லலாம். நிலம், வீடு வாங்கும் விஷயங்களை தள்ளிப்போடுவது ந்ல்லது. கடன், நோய் ஏற்படும். உங்களுக்கு சொந்தமான மூதாதையர் நிலங்கள் உறவினர்களிடம் பறிபோக உள்ளது. ஆரோக்கியக் குறை ஏற்படலாம். சனிக்கு குரு பார்வை கிடைப்பதால், பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  கடன் வாங்கி கடன்காரனாகவும் ஆவீர்கள். நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள்.
                        ஆண்டின் பிற்பகுதியில் மே மாதம்  27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார்.  சாதாரணமாகப் பார்த்தோமானால், 4-மிடத்தில் குரு நற்பலன்களை வழங்குவதில்லை. ஆனால் , தற்போது இந்த சஞ்சாரத்தில் ஏனைய கிரக சஞ்சாரங்களாலும், குரு பார்வையினாலும் இந்த சஞ்சாரத்தில் உங்களுக்கு நற்பலன்களை வழங்கப் போகிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.  அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம். இந்த நற்பலன்கள் குருவின் 4-ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நிகழ்ந்து 7.11.2013 வரையில் முடிவடையும்.
                  குரு  நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல்  ஆண்டின் இறுதிவரை , வக்கிரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள்  ஏற்படும்.  கல்வியில்  சில தடைகள் உண்டாகலாம்.  மருத்துவச் செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  குருவின் வக்கிர பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முக்கிய விஷயங்களை தள்ளிப் போட்டீர்களால் பிரச்சினைகள் குறையும்.
 பரிகாரம்:
ஆண்டு  முற்பகுதியில் குரு  3-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. .தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி அஷ்டமசனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  8-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவ்ன் 2-ம் இடம் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். கோவிலை சுத்தம் செய்து வணங்கவும் . கொள்ளு தானம் செய்யவும்.
     இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் அமைந்த சாதகமான குரு சஞ்சாரம் உங்களைக் காப்பாற்றும்.
               வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.