Thursday, June 21, 2012


பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா?--அழகு குறிப்புகள்


பட்டுக் கூந்தலை பெறவேண்டுமா?

விளம்பரங்களில் வருவது போன்றபட்டுக் கூந்தலை பெற வேண்டுமா
இதோ சில கூந்தல் பராமரிப்புகுறிப்புகள் ;
ü ஒரு கை அளவு வேப்பிலைஎடுத்து நாலு கப் தண்ணீரில் நன்குகொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால்தலையை அலசி வந்தால் பொடுகுவராமல் தடுக்கலாம் .
ü வினிகரை தலையில் தடவிகுளித்து வந்தால் பொடுகுதொல்லை குறையும் 
ü சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் . 
ü வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூஇவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில்கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்இந்த பொடியைஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில்தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல். 
ü ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலைவறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .
ü அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர்உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
ü ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவிஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில்இருந்து விடுபடலாம்  
ü தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரைகலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டிகொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையைபேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண்தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .
ü முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும்உங்கள் கூந்தல் .
ü முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்தஉணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் . 
ü இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையேதடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல்தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசைஉள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
ü எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்லஎண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டுசிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவிசீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடிஉதிர்வதையும் தடுக்கலாம் .
 

No comments: