Friday, September 14, 2012


பாலுறுப்புக்களின் சுத்தம் அவசியம்...!!


நாம் நம் உடலை சுத்தமாக வைக்கிறோம் என்றால் நம் உடலை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோம் என்று தான் பொருள். அப்படி நாம் நம் உடம்பை சுத்தமாக வைத்துகொல்லும்போது  உடல் ஆரோகியம் பேணப்படுகிறது .அதோடு நம் உடம்பு பல நோய்களில் இருந்து பாதுகாப்பை பெறுகிறது. தினமும் குளித்தல் ,பல் துலக்குதல் , தூய்மையான ஆடைகளை அணிதல் போன்றவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.  அதேபோல்தான் பாலுறுப்புகளின்  சுத்தமும், அவற்றை தினமும் ரொம்ப கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் . இல்லை என்றல் பல தோற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாகும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுருபுகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இத்திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்  வரை  தான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை துப்புரவாக வைக்கிறது. அத்திரவம் பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்க கூடும்.அதற்கு வெளிசூழல் தான் காரணம்.


வெளிசூழலில் இருக்கும் பாக்டீரியகளின் தாக்குதலால் அத்திரவம் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது . எனவே நாம் ரொம்ப கவனமுடன் இருக்க வேண்டும். அபகுதிகளை எப்போதும் சுத்தமாக பேணவேண்டும் .


அதேபோல் தான் மலம் சிறுநீர் கழிக்கும் பகுதிகளை நம் சுத்தமுடன்  வைத்து கொள்ள  வேண்டும். ஒவொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பொது நாம் அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏன் என்றால்  நம்  உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவையே  அப்பகுதிகளில்  தங்கிவிடாமல் இருக்க தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். பாலுறுப்புகளை  தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும்  சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகபடுத்தலாம் . ஏன் என்றால் இது ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது.






இது தவிர வேறு எதாவது லோசன் அல்லது ரசாயன பொருட்கள் உபயோகிப்பது  என்பது டாக்டரிடம் அறிவுரை கேட்டபின் தான் உபயோகப்படுத்த வேண்டும். நாமே  டாக்டரிடம் ஆலோசனை இன்றி பயன்படுடும்போது அப்பகுதிகளில் அப்போருட்களால்  பாதிப்புகள் அதாவது கொப்புளங்கள், புண்கள் , அரிப்பு போன்றவை வர வாய்ப்புள்ளது.


பாலுறுப்புகள் நாம் சுத்தம் பராமரிக்கும்  போது மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.


அதே போன்றுதான்  பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் தூய்மையுடன் உடலை  பராமரிக்க வேண்டும் . ஏன்  என்றால் பல  தொற்று கிருமிகள் பாலுறுப்புகளை  தாக்க நேரிடும். தினமும் குளித்து அவ்வபோது நாப்கின் அல்லது துணியை மாற்றி சுத்தமான மாற்று  துணியினை வைக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் டெட்டால் நீரில் கலந்து அப்பகுதிகளை  சுத்தம்செய்வது மிகவும் நல்லது. மாதவிடாய்  காலங்களில் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் நம் அன்றாட வேலை செய்வது உடலுக்கும் மனதிற்கும் தெம்பை கொடுக்கும்.பெண்கள் அணியும் உள்ளாடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து உபயோகபடுத்துவது நல்லது . பொதுவாக மற்றவர்களின் உள்பாவாடை , ஜட்டி போன்றவைகளை ஒரு போதும் அணியக்கூடாது. உள் ஆடைகள் பருத்தி துணியினால் ஆனதை உபயோகபடுத்தவேண்டும். அப்போதுதான் வியர்வையினை அத்துணி  உறிஞ்சி  எடுத்து வியர்வையினால் வரக்கூடிய தொற்று நோயை அது தடுக்கும்.

No comments: