Sunday, October 7, 2012


தம்பதியர்களுக்காக – உடலுறவு பற்றிய தவறான எண்ணங்களும் விளக்கங்களும்

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம்பெண்களின் அம்சங்கள் இல்லை யெ ன்றும், உடலுறவில் தம்மால் ஆண் ளைத் திருப்திப்படுத்த முடியாது என் றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள். கிராமத்து பெண்களிடம் மட்டுமல் ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங் களது உடல் அ மைப்பு குறித்த தவறான எண் ணங்கள் உள்ளன. இதைத்தா ன் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ண ங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கி றார்கள் என்பது பற்றியநம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது.
முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண் ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என் றொரு நம்பிக் கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரி யானவை என்பது பற்றி த்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த நம்பிக்கைகள் எந்த கால கட்டத்தில் உருவானவை என் பது இதுவரை கண்டறியப் படவில் லை. விஞ்ஞா னரீதியான சிந்த னைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத  காலகட்டத் தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்க ளுக்கும் கற்பனையில்தான் வி டைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதார ணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என் பது கண்ட றியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத் தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவ தும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக் கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடை ந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலை முறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக் கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கி ன்றன. இதுபோல் தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கை களும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின் றன. இண்டெர்நெட்டில் நூற்றுக் கணக் கான சைட்கள் இதுபற்றி இருக்கின் றன என்றால், உலகம் முழுக்க இந்த நம் பிக்கை எந்த அளவுக்கு காலூன்றி யுள் ளது பாருங்கள்.
இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவை தானா என்று பார்ப் போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால் தான் பெண்ணை திருப்திப்படுத்த முடி யும் என்பதை எடுத்துக் கொள்வோம்.
ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ் வளவு சிறியதாக  இருந் தாலும், அதுபற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஏனெனி ல், அப்போது அதனு டைய வேலை, சிறுநீர் கழிப்பது மட் டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த ளவுக்கு அது நீளமாக, தடி மனாக இருக் கிறதோ, அந்த அள வுக்குப் பெண் ணைத் திருப்திப் படுத்த முடியும் என்னும் நம்பிக் கை உள்ளதால், விறைப்புத் தன் மை அடைந்த நிலையில், ஆண் பிற ப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக் கிறது என்பது முக்கியமா கி விடுகிறது. அதாவது, பெண் பிறப்புறு ப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப் படும்போதுதான், பிறப் புறுப்பின் உட்புறச் சுவர்களில் உரா ய்வு ஏற்பட்டு, அவள் உச்ச கட்ட இன்பத்தைப் பெற்று திருப்தி யடைகிறாள் என்பது நம்பி க்கை. அதைவிட முக்கி யமா னது, பெண்ணை திருப்தி ப்படு த்துவது என்பது ஆண்மை யின் அடையாளமாகவும், வீர த்தின் அடையாளமாகவும் வே று கொள்ளப்படுகிறது. இதன டிப்ப டையில்தான் இந்த நம் பிக்கை உருவாகியுள்ளது.
பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மே லும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவு களைப் பார்ப்போம். சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலை யில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்ட றியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப் புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்ட ப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில் தான் உள்ளன. அதை யும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமி ல்லை. எனவே, ஒரு பெண்ணி ன் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறை ப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப் புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம் கொண்டதாகத் தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமை ந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறிய தாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றா லும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு  பெண், ஒரு ஆணுடன் எந்த அள வுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக் கு  அவன் மேல் விருப்பமும் ஆசை யும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத் தான் அவள்  உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும்  திருப் தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக் கங் களைப்பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்தி ப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும் பும் விதமாக, அவளது ஆசை களையும் விருப்பங்களை யும் தெரிந்து நடந்து கொள்வ துதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப் பின் அளவு பற்றி கவலைப்படுவது தே வையில்லாதது.
எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை  மட்டும் கடவுள் ஏமாற் றிவிட்டான் என்று கவலைப்படுவ து தேவையில்லாதது. மூக்கு பெரிதாக  இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவ தில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல் தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க் க நேரும். சில ஆண்கள் தனது பிற ப்புறுப்பு அவர் களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணு கின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத் தில் பார்ப்பதற்கும் தூரத் தில் பார்ப்ப தற்கும் வித் தியாசம் உள்ளது. பக்க த்தில் பார்க்கும்போது சிறி தாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க் கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷ ன்(Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.
போலி டாக்டர்களும் மருந்து தயா ரிப்பவர்களும் இந்த பயத் தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன் படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக  ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என் று மேலும் அதிகம் பயங் காட்டி காசு சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சிநின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண் மை. மேலும் எந்த மருந்து மாத்தி ரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடி யாது என்பதும் விஞ் ஞான ரீதியான உண்மை.
இதேநிலைதான் பெண்ணின் மார் பகங்களுக்கும். அது சிறிதாக இரு ப்பதற்கும் பெரிதாக  இருப்பத ற்கும் செக்சுக்கோ அல்லது குழந் தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந் தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காத லுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம்.
நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வே ண்டும் என்று அவசியமே இல்லை.பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண் ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லா மல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரி பூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

No comments: