Sunday, October 7, 2012


சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? – ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் தான் அதிக இன்பம் கிடைக்குமா


 ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும்,தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது,ஆணுறுப்பு சிறுத்து விடும்,சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம்பரம் செய்கிறார்கள.இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது.அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது.சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி,அணுறுப்பில் சுருக்கம்,பால்வினை நோய்கள்,விந்து நீர்த்து போதல்,மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது.
இதனை மேலும் உறுதி படுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன் பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திரக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரணங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம்.ஆண்களின் விரையில் சிலருக்கு வொரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.
ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் தான் அதிக இன்பம் கிடைக்குமா…?
ஆணுறுப்பு மிக நீளமாக இருந்தால் தான் செக்ஸில் முழு இன்பம் அனுபவிக்க முடியும் என்று நினைப்பதே ஒரு முட்டாள்தனமான எண்ணம்.ஒரு ஆணுக்கு உடல் உறவின் போது மூன்று அங்குலம் நீள ஆண்குறி இருந்தால் மட்டுமே போதும்.உறுப்பின் நீளம் முக்கியமில்லை,உடல் உறவில் மிக மிக முக்கியமானது ஆணுறுப்பின் வீரிய மிக்கவிரைப்பு தன்மைதான்.விரைப்புத் தன்மையில் குறைபாடு இருந்தால் தான் கவலை கொள்ள வேண்டும்.

No comments: