Sunday, July 15, 2012


பூப்பு காலத்தில் பூரிப்பில்லையா?


ஒரு பெண் பருவமடைந்ததும், மாதந்தோறும் தோன்றும் பூப்பு என்னும் மாதவிலக்கானது பெண்ணின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக அமைகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது ஏற்படும் வேதனையும், மாதவிலக்கிற்கு முந்தைய காலங்களில் தோன்றும் உடல் மற்றும் மன உபாதைகளும் பெண்ணிற்கு மாதவிலக்கின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. பூப்புக்கு முந்தைய குறிகுணங்கள் என்று அழைக்கப்படும் பி.எம்.எஸ். பல பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் சோர்வை ஏற்படுத்துகின்றன.மாதவிலக்கிற்கு 14 நாட்கள் முன்பாகவே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் தோன்றி, பின் மாதவிலக்கு ஏற்பட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பும் சில தொல்லைகள் மாதந்தோறும் பெண்களை பாடாய்படுத்துகின்றன.
ஒருவித எரிச்சல் உணர்வு, பதட்டம், மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி, முரண்பட்ட மனநிலை, வயிறு உப்புசம், வயிற்று சதைகள் இறுக்கி பிடித்தல், வாந்தியோ, குமட்டலோ உண்டாதல், மலச்சிக்கல், மார்புகளில் இறுக்கம், முகப்பருக்கள் ஆகியன மாதவிலக்குக்கு முன்பாக தோன்றி, உதிரப்போக்கு ஏற்பட்டதும் மறைந்துவிடுகின்றன.அதிகமாக காபி, தேநீர் அருந்துபவர்கள், மன அழுத்தமுடையவர்கள், முதிர் கன்னிகள், குறைந்த ரத்த அழுத்தமுடையவர்கள், ஹார்மோன் குறைபாடு உடையவர்கள், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறை உடையவர்கள், வைட்டமின் பி6, ஈ மற்றும் டி சத்து குறைபாடு உடையவர்கள் பூப்புக்கு முந்தைய தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றனர்.அறிவியல் ஆய்வுப்படி மத்திய நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும் செரடோனின், என்டோர்பின் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டினாலும், மரபு சார்ந்த காரணிகளாலும் இந்த தொல்லைகள் உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த தொல்லை உடையவர்கள் காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்த கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் தியானத்தை முறையாக பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஹார்மோன்கள் சீரடையும். பெண்களுக்கு பூப்பு காலத்திற்கு முன்பு தோன்றும் பலவித தொல்லைகளை நீக்கி, புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தரும் அற்புத மூலிகை ஈவினிங் ப்ரைம்ரோஸ் என்ற சீமை செவந்தி.மஞ்சள் மற்றும் சிவப்புநிற அழகிய பூக்களை உடைய இந்த பெருஞ்செடிகள் மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.
இந்தியாவின் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இதன் நீண்ட விதைகளிலுள்ள பன்பூரித அமிலங்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில் பெண்களின் பூப்புகால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன. ரினோலிக் அமிலம் ஜி.எல்.ஏ. என்ற காமாலினோலெனிக் அமிலம், லினலூல் மற்றும் புரோஸ்டோகிளான்டின்களின் மூலகங்கள் மாதவிலக்குக்கு முந்தைய காலங்களில் தோன்றும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மார்பகங்களின் இறுக்கம், பிறப்புறுப்பில் தோன்றும் தேவையற்ற நீர்க்கசிவு, மனம் மற்றும் உணர்வு சார்ந்த இறுக்கநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியானபூப்பை உண்டாக்குகின்றன.ஈவினிங் ப்ரைம்ரோஸ் எண்ணெயில் உள்ள மருந்துச் சத்துகள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகின்றன. பலஹீனமான சர்க்கரை நோய் பெண்களுக்கு இன்சுலினின் சுரப்பை சமப்படுத்துகின்றன. மாதவிலக்கு முதிர்வுக்கு பிந்தைய நிலையில் உடல் பருமன் மற்றும் தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றன. மாதவிலக்கின் முந்தைய காலத்தில் தோன்றும் மார்பு துடிப்பு சீரற்ற நிலை, வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 500 மி.கிராம் முதல் 2 கிராம் வரை காமாலினோலினிக் அமிலம் தேவைப்படுகிறது. இதனை ப்ரைம்ரோஸ் எண்ணெயிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மருந்துக்கடைகளில் கிடைக்கும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் அல்லது ப்ரைம்மோஸ் மென்குமிழ் மாத்திரையை தினமும் 1 வீதம் மாதவிலக்கான மூன்றாம் வாரத்திலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள பூப்பு காலத்தில் தோன்றும் பலவிதமான தொல்லைகள் நீங்கும். ஈவினிங் ப்ரைம்ரோஸ் விதையிலிருந்து எடுக்கப்படும்
எண்ணெயை உப உணவாகவும், ஊட்டச்சத்து உணவாகவும் அறிவியல் உலகம் அங்கீகரித்துள்ளது.
*காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.
* வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில், பெண்களின் பூப்பு கால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன.
* நன்னாரியால் நன்மையே நன்னாரி ரத்தத்திலுள்ள கால்சியம் ஆக்சலேட் அளவை கட்டுப்படுத்தி, அவற்றின் கூட்டுத்தன்மையை குறைக்கும் தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரை நன்கு வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் அதற்காக உட்கொண்ட எதிர் உயிரி மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நீக்குகின்றன. அலனைன் கிளைக்காக்ஸ்லேட் அமினோடிரான்ஸ்பரேஸ் பற்றாக்குறையினால் அதிகப்படும் ஆக்சலேட் உப்புகளை நீக்கி, நீரில் கரையக்கூடிய கால்சியம் ஆக்சலேட்டுகளாக மாற்றும் தன்மை நன்னாரிக்கு உண்டு.இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பலவகையான கற்கள் தோன்றுவது தவிர்க்கப்படுகிறது. நன்னாரியை நீரில் ஊறவைத்தோ அல்லது வேகவைத்து சர்பத் போல் செய்தோ வெயில் காலத்தில் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும். நன்னாரியை அரசர் காலத்திலிருந்தே பானகமாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கி வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன.

No comments: