Monday, July 16, 2012


பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது.
தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன? மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன் பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், கால ணிகள், குழந்தைக்குத் தேவை யான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண் டுகள் போன்றவற்றை மறக் காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கன வே உங்களுக்கு குழந்தைகள் இருந் தால் அவர்களைப் பார்த்துக் கொ  ள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.
அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங் கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புர வுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண் டும். உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத் திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன் றோரின் செல் நம்பர் களை குறித்து வைத்துக் கொ ள்ளுங்கள்.
அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவி யாக இருக்கும். பிரச வத்தின்போது மருத்துவம னைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள். முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணி நேரம் வரை ஆகலாம். ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமே நீடி க்கும்.
கர்ப்பகாலம் முழுவதும் கருப்பை யின் தசைகள் சுருங்கி விரிந்து பிரச வத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக் கங்கள் அடிக்கடி நிகழும். தொட க்கத்தில் மிகக்குறைந்த அளவி லா ன தசைச் சுருக்கங்களே காணப் படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படி ப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும்.
இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணி களை குளிப்பாட்டுவர். இளஞ் சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேத னையை சற்று தணி க்கும் என் பதால் இவ்வாறு செய்கிறார்கள்.
தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணி களை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினை த்து கவ லை ப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரி வடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவது தான் முழு மையான சுவாசம்.
நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச் சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும். பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதி யிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளி யே றும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக் கசிவு’ என்று பெயர்.
இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிர சவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண் டிருக்கிற பனிக்குடம் உடைந் து விடும்.
இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரு ம்போதும் கருவை உந்தி வெளி யே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கரு ப்பைக் கழுத்து முற்றி லுமாகத் திறந்து குழந் தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப் பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச் சியும் அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடு ங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும். கருப் பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற் றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங் கும்.
ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்  பையின் தசைநார்கள் கொஞ் சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இத னால் குழந்தை யோனிக்குள் தள்ளப் படுகிறது. யோனித்திறப்பில் குழந்தை யின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம் பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும்.
இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற் படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சி யுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். சில சமயங் களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்ப ட்டால், சிசேரியன் செய்து குழ ந்தையை வெளி யில் எடுப்பார்கள்.
எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வே ண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத் தின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழ ந்தை தடம் மாறியிரு த்தல், குழந்தைக்கு மூச் சுத்  திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள் ளப்படுகிறது. மயக்கமருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செ ய்யப்படும்.

No comments: