Sunday, July 15, 2012


இறுக்கமான பேண்ட் அணிந்தால்…



காலை ஒட்டிப் பிடித்திருக்கும் இறுக்கமான பேண்டை அணிவதில் சிலருக்கு விருப்பம் அதிகம். அதிலும், பெண்களுக்கு. அது தங்களை அழகாகவும், நாகரீகமாகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து இறுக்கமான பேண்ட்களை அணிவது, கால் தசைகளை தொய்வடையச் செய்து `தொளதொள’வென்று ஆக்கிவிடும் என்கிறார்கள், நிபுணர்கள். இறுக்கிப் பிடிக்கும் பேண்ட், `சோம்பேறித் தசைகளை’ உருவாக்கி, கால்களையும், வயிற்றையும் தொய்வடையச் செய்துவிடும் என்று கூறுகிறார்கள்.
“இறுக்கமான பேண்ட்கள், கச்சிதமான உணர்வையும், நல்ல தோற்றத்தையும் தருகின்றன என்பது உண்மை. பலரையும் போல நானும் அதற்கு அடிமையாக இருந்தேன். அவை, தொடை தசைகள், பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதித் தசைகளைப் பற்றியிருக்கின்றன, ஆதரவாக இருக்கின்றன. அதாவது, தசைகள் செய்ய வேண்டிய வேலையை இவை செய்கின்றன. எனவே, தசைகள் தளர்வாகவும், தங்கள் பணியில் இருந்து விலகியும் இருக்கின்றன.
தொடர்ந்து இறுக்கமான கால்சட்டையை அணிந்து பின் தளர்வான ஆடைகளை அணியும்போது, தசைகள் அவை இருக்க வேண்டிய விதத்தில் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருப்பதில்லை என்பதை நான் கண்டுகொண்டேன்” என்கிறார், பிசியோதெரபிஸ்ட் சாம்மி மார்கோ.
பெண்கள் பொதுவாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதால் அவர்களுக்கு இந்தப் பாதிப்பு கூடுதலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments: