Sunday, July 15, 2012


கீழ்கண்ட மூலிகைகளை குறிப்பிட்ட படி சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நல‌ம் பெறும்.
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு.
  2. வசம்பு.
  3. திப்பிலி.
  4. மிளகு.
  5. பெருங்காயம்.
  6. கடுக்காய் தோல்.
  7. அதிவிடயம்.
  8. இந்துப்பு.
செய்முறை:
  • சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும்.
  • வசம்பு, திப்பிலி, மிளகு,பெருங்காயம் ஆகியவற்றை இடித்து சலித்து கொள்ளவும்.
  • கடுக்காய் தோல், அதிவிடயம் இரண்டையும் நன்கு உலர்த்தி இடித்த சலித்து வைத்து கொள்ளவும்.
சலித்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து அதனுடன் சிறிது இந்துப்பை பொடித்து போட்டு நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த சூரணத்தை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நல‌ம் பெறும்.
தீரும் நோய்கள்:
  • இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, மூச்சு திணறல், பதற்றம், சோர்வு, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம், காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் பலக்குறைவு ஆகியவை குறையும்.

No comments: