சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)
சென்ற பதிவில் (ஆசையில்லா மனிதர்கள்) சஹர் பக்கிர்
பாவாவின் மகனார், தற்சமயம் வாடகை ஆட்டோ ஒட்டி அன்றாட
பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ
வாங்கிக் கொடுப்பதாக, நகையை தொலைத்து திரும்ப பெற்றுக்
கொண்ட நமது சொந்தக்காரர்கள் மகிழ்ச்சியோடு இன்று
தெரிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்!!! **************************************************************************************
கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள். நமக்கும் தானே அவர் டாக்டர் பட்டம் கொடுத்தார்.
நாமும் மருத்துவத்தைப் பற்றி எழுதலாம் என்று இங்கே ஒரு
பதிவை போடுகிறேன். டாக்டர்கள் வாழ்க!! ஹி..ஹி.. (நான் என்னை சொல்லிக் கொண்டேன்.)
சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)
சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக்
கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று
வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும்.
சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?
சாதரணமாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய்
ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி,
சாதாரண நடையோ - வேக நடையோ நடந்து உடலை
கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது. அதை
விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும்
பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் கேட்கவே
வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக்
கடந்து விடும்.
ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட
விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.
ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும்
போது, திடுதிப்பென்று சுகர் 240 - 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட
வேண்டாம் எனும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.
அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல்
செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். இங்கே
சவுதியில் பெரும்பாலான கம்பெனிகளில் மெடி-இன்சூரன்ஸ்
இருப்பதால் மூன்று மாததிற்கொருமுறை ஃபுல் செக்அப் செய்து
கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள். அதுவும்
நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம்
அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பயனைத் தருகிறது.
இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக்காயை வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு
வெண்டைகாயை தலையையும் வாலையும் வெட்டிவிட்டு, இரவில் படுக்கப் போகுமுன், மேலே படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ்
தண்ணீரில் அவைகளை போட்டு ஊறவைத்து மூடிவிடவும்.
காலையில் எழுந்தவுடன் அந்த ஊறவைத்த தண்ணீரை எடுத்து,
ஸ்லைஸ் வெண்டைக்காய்களையும், கொட்டைகள் உதிர்ந்து
கிடந்தால் அவைகளையும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு
விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல்விளக்கியபிறகு வெறும்
வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து
செய்துவர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில்
இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து
கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு
சுகர் கட்டுக்கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப்
பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
இருங்க!! இன்னொரு குறிப்பையும் சொல்லிவிட்டு போகிறேன்
யாரும் அடிக்க வராதீங்க!!
இரவில் கண்விழித்து நெடுந்தூரம் காரோட்டி பயணிப்பவர்களுக்கு,
வழியில் தூக்கம் வருவதைப் போல் கண்கள் செருகினால்,
எங்காவது ஓரிடத்தில் காரை நிறுத்தி சிறிது நேரம் கண்ணுறங்கி
விட்டு செல்வார்கள் பார்த்திருக்கிறோம். அப்படியல்லாது விரைந்து பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை!!
நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)
பாவாவின் மகனார், தற்சமயம் வாடகை ஆட்டோ ஒட்டி அன்றாட
பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ
வாங்கிக் கொடுப்பதாக, நகையை தொலைத்து திரும்ப பெற்றுக்
கொண்ட நமது சொந்தக்காரர்கள் மகிழ்ச்சியோடு இன்று
தெரிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்!!! **************************************************************************************
கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள். நமக்கும் தானே அவர் டாக்டர் பட்டம் கொடுத்தார்.
நாமும் மருத்துவத்தைப் பற்றி எழுதலாம் என்று இங்கே ஒரு
பதிவை போடுகிறேன். டாக்டர்கள் வாழ்க!! ஹி..ஹி.. (நான் என்னை சொல்லிக் கொண்டேன்.)
சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)
சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக்
கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று
வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும்.
சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?
சாதரணமாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய்
ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி,
சாதாரண நடையோ - வேக நடையோ நடந்து உடலை
கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது. அதை
விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும்
பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் கேட்கவே
வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக்
கடந்து விடும்.
ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட
விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.
ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும்
போது, திடுதிப்பென்று சுகர் 240 - 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட
வேண்டாம் எனும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.
அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல்
செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். இங்கே
சவுதியில் பெரும்பாலான கம்பெனிகளில் மெடி-இன்சூரன்ஸ்
இருப்பதால் மூன்று மாததிற்கொருமுறை ஃபுல் செக்அப் செய்து
கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள். அதுவும்
நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம்
அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பயனைத் தருகிறது.
இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக்காயை வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு
வெண்டைகாயை தலையையும் வாலையும் வெட்டிவிட்டு, இரவில் படுக்கப் போகுமுன், மேலே படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ்
தண்ணீரில் அவைகளை போட்டு ஊறவைத்து மூடிவிடவும்.
காலையில் எழுந்தவுடன் அந்த ஊறவைத்த தண்ணீரை எடுத்து,
ஸ்லைஸ் வெண்டைக்காய்களையும், கொட்டைகள் உதிர்ந்து
கிடந்தால் அவைகளையும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு
விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல்விளக்கியபிறகு வெறும்
வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து
செய்துவர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில்
இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து
கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு
சுகர் கட்டுக்கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப்
பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
இருங்க!! இன்னொரு குறிப்பையும் சொல்லிவிட்டு போகிறேன்
யாரும் அடிக்க வராதீங்க!!
இரவில் கண்விழித்து நெடுந்தூரம் காரோட்டி பயணிப்பவர்களுக்கு,
வழியில் தூக்கம் வருவதைப் போல் கண்கள் செருகினால்,
எங்காவது ஓரிடத்தில் காரை நிறுத்தி சிறிது நேரம் கண்ணுறங்கி
விட்டு செல்வார்கள் பார்த்திருக்கிறோம். அப்படியல்லாது விரைந்து பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை!!
சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.
நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)
No comments:
Post a Comment